Tuesday, August 16, 2011

ருத்திராக்ஷம் மணிகளை அணிய வேண்டிய காலங்கள்

BKSURESHV@GMAIL.COM

ருத்திராக்ஷம் மணிகளை அணிய வேண்டிய காலங்கள்

வேத பாராயணம், வேதம் கற்றல், சிவநாம ஜெபம், சந்தியா வந்தனம், வேதம் ஓதுதல், சிவபூஜை, சிவ புராணம் வாசித்தல், ஓதுவதை கேட்டல், சிவ ஜெப தியானம், சிவாலய தரிசனம், தேவார திருவாசகம், சிவதலங்களை தரிசிக்கும் சமயம், புனித தீர்த்தங்களில் நீராடல், விரத காலம், இறந்தவர்கள் நினைவு நாளில் சீரார்த்தம் சடங்குகள் செய்யும் காலம்.  புனித விழா காலங்களில் ருத்திராக்ஷம் மணிகளை அணியலாம்.

ருத்திராக்ஷம் மணிகளை அணியக் கூடாத காலங்கள்

குழந்தை பிறந்த தீட்டு, மரணமடைந்த தீட்டு, மாதவிலக்கு தீட்டு, குஷ்டம் போன்ற பெரு வியாதி காலம், தாம்பத்திய உறவு காலம், மலம் கழிக்கும் காலம், தூங்கும் சமயங்களில் ருத்திராக்ஷம் மணிகளை கழற்றி வைத்து விட வேண்டும்.  கழற்றிய மணியை அணியும்போது சிவநாமம் சொல்லி அணிய வேண்டும்.

வாரத்தின் எந்த கிழமைகளில் பிறந்தவர்களுக்கு அணிய வேண்டிய ருத்திராக்ஷ மணிகள் விவரம்:

கிழமை கிரகம் அதிதேவதை பிரதி தேவதை
அணிய
வேண்டிய
ருத்திராக்ஷ
மணிகள்
ஞாயிறு சூரியன் அக்னி ருத்திரன் 1-3-5-11
முக மணிகள்
திங்கள் சந்திரன் வருணன் துர்க்கை உமாதேவி 2-5-7
முக மணிகள்
செவ்வாய் அங்காரகன் பூமிதேவி ஷண்முகா 3-7-6
முக மணிகள்
புதன் புதன் விஷ்ணு புருசோத்தமர் 4-10-21
முக மணிகள்
வியாழன் குரு இந்திரன் பிரம்மா 4-5-8
முக மணிகள்
வெள்ளி சுக்கிரன் இந்திராணி இந்திரன் 6-7-8
முக மணிகள்
சனி சனிஸ்வரன் யமன் பிரம்மா 7-3-4
முக மணிகள்

27 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ருத்திரக்ஷ மணிகள்

நட்சத்திரங்கள் கிரகம் ருத்திராக்ஷ மணிகள்
அசுவினி, மகம், மூலம் கேது 9-2-3 முக மணிகள்
பரணி, பூரம், பூராடம் சுக்கிரன் 6 முக மணிகள்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் சூரியன் 1-3-11-12 முக மணிகள்
ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் சந்திரன் 2-3 முக மணிகள்
மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் செவ்வாய்     3 முக மணிகள்
திருவாதிரை, ஸ்வாதி, சதயம் ராகு 8-5-11 முக மணிகள்
புனர்பூசம், விசாகம், புரட்டாதி குரு 5 முக மணிகள்
பூசம், அனுசம், உத்திரட்டாதி சனி 7 முக மணிகள்
ஆயில்யம், கேட்டை, ரேவதி புதன் 4 முக மணிகள்

12 ராசிகளில்/லக்கினங்களில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ருத்திராக்ஷ மணிகள்

ராசி/லக்கனம்   ராசி அதிபதி   சாதக கிரகம்  
மேசம் செவ்வாய் செவ்/குரு 3 முகம், 5 முக மணிகள்
ரிஷபம் சுக்கிரன் புதன்/சனி 6, 4, 7 முக மணிகள்
மிதுனம் புதன் புத/சுக் 4, 6 முக மணிகள்
கடகம் சந்திரன் சந்தி/செவ் 3, 2 முக மணிகள்
சிம்மம் சூரியன் சூரி/செவ் 1, 12, 3 முக மணிகள்
கன்னி புதன் புதன்/சுக்கி 4 - 6 முக மணிகள்
துலாம் சுக்கிரன் சுக்கி/சனி 6 - 7 முக மணிகள்
விருச்சிகம் செவ்வாய்     குரு/சுக்கி 3, 5, 7 முக மணிகள்
தனுசு குரு குரு/சூரியன்   5, 1, 12 முக மணிகள்
மகரம் சனி சனி/சுக்கி 7 - 6 முக மணிகள்
கும்பம் சனி சனி/சுக்கி 7 - 6 முக மணிகள்
மீனம் குரு குரு/செவ் 5 - 3 முக மணிகள்

ருத்திராக்ஷ மணிகளை பெண்களும் அணியலாம்

பெண்களின் தெய்வமாக விளங்கும் ஷ்ரீ ஆதிபராசக்தி தமுத்திலிருத்திராகளம் அணிந்திருப்பாள். திருவண்ணாமலை தல புராணத்தில் அருணாசல புராணம் என்ற அரிய நூலில் உண்ணாமுலை அம்மை காதில் ருத்திராக்ஷம் அணிந்து ஜெபம் செய்ததாக புராணம் கூறுகிறது. திருவானை காவல் ஷ்ரீ அகிளாண்டேஸ்வரி அட்சமணி அணிந்த தாகவும், அகிளாண்டநாயகி ஆராதணைபடலம் பாடல் 68ல் குறிப்பிட்டுள்ளது. பிரம்மக்கரியம், கிரஹஸ்தாஸ்ரமம். வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற ஆஸ்ரம வாழ்க்கை வாழ்ந்த பெண்கள் ருத்திராக்ஷ மணி அணிந்ததாக புராண வரலாறுகள் குறிப்பிட்டுள்ளது. இளம் வயதில் சிறிய ருத்திராக்ஷ மணி மாலைகளையும். வயது முதிர்ந்தவர்கள் பெரிய ருத்திராக்ஷ மணிகளையும் அணியலாம்.

தெய்வஸ்களும் ருத்திராக்ஷ மணி மாலை அணிந்தது பற்றிய குறிப்புகள்:
1. ஷ்ரீ விநாயகி பெருமான் திரும்புவைாயிற் புராணத்தில் விநாயகர் சருக்கம் என்ற படலத்தில் நான்காம் பாடலில் குறிப்பிட்டுள்ளது.
2. சிவபெருமான் திருவாரூர் தியாகராசலீலையின் மூன்றாம் பகுதியில் மானிட ரூபம் எடுத்து ருத்திராக்ஷம் அணிந்தார் என குறிப்பிட்டுள்ளது.
3. சக்தி திருவானை காவல் கோவில்புராணம். அகிலாண்டநாயகி ஆராதனை பாடல் (படலம்) 68வது பாடலில் குறிப்பிட்டுள்ளது.
4. ஷ்ரீ பிரம்மா விளத்தொட்டிப் புராணத்தில் பிரம்மன் பூஜை படலத்தில் பாடல் 14ல் குறிப்பிட்டுள்ளது.
5. ஷ்ரீ விஷ்ணு திருவானைக் காவல் புராணம் திருமால்விழி பாடு படலம் பாடல் 13ல் குறிப்பிட்டுள்ளது.
6. ஷ்ரீ சூரிய பகவான் திருபுனல்வாயில் புராணத்தில் தினபதி சுருக்கம் பாடல் 5ல் குறிப்பிட்டுள்ளது.
7. ஷ்ரீ சந்திரன் திருபுனல்வாயில் புராணத்தில் உடுபதி சுருக்கம் பாடல் 13ல் குறிப்பிட்டுள்ளது.
8. ஷ்ரீ பைரவர் விளத்தொட்டி புராணத்தில் வயிரவ பூஜைப்படலம் பாடல் 26ல் குறிப்பிட்டுள்ளது.
9. அஸ்காரகன் திருப்புனல்வாயிலின் புராணம் பார்மகண் என்ற சொல்லில் செவிவியம் கிரகத்தை குறித்து ருத்திராக்ஷம் அணிந்ததாக உள்ளது.
10. யமன் திருபுனல்வாயின் புராணம் ஜியமச்சுருக்கம் படலத்தில் பாடல் 66ல் குறிப்புள்ளது.
11. வாயு திருப்பைஞ்ஞீலி ஸ்தல புராணத்தில் வாயு பூஜை மகிமை படலத்தில் பாடல் 7ல் குறிப்புள்ளது.
12. ஷ்ரீ ராமர் தின் வான் மியுர் புராணம் இராமன் வரம்பெறும் படலம் பாடல் 19ல் குறிப்பிட்டுள்ளது.
  -

ருத்திராக்ஷ மாலை ஜபம் செய்யும் திசைகளின் பலன்கள்

திசைகள் பலன்கள்
1. இந்திர திசை (கிழக்கு) தினம் அனைத்தும் வகிய மனரும்
2. அக்கினி திசை (தென் கிழக்கு) பலவகை நோய் விட்டு விலகும்
3. யமன் திசை (தெற்கு) துன்பங்கள், தீமைகள் வரும்
4. திரு ருதி திசை (தென் மேற்கு) கொடிய வறுமை வாங்கும்
5. வருண திசை (மேற்கு) சேர்த்து வைத்த செல்வம் அழியும்
6. வாயு திசை (வட மேற்கு) பேய், பில்லி, தனியம் நம்மை விட்டு ஓடும்
7. குபேர திசை (வடக்கு) பொன், பொருள் கல்விபேறு சகல சம்பத்துகளும் சேரும்
8. ஈசான திசை (வட கிழக்கு)    முக்தி பேறு அடையணம்.
  
தெய்வங்களில் சிறந்தவர் பரமகிலுன். புருஷர்களில் சிறந்தவர் விஷ்ணு கிரஹங்களில் சிறந்தவர் நாயகி. பசுவில் சிறந்தது காமதேனு ருதிசையில் சிறந்தது உச்சை சிரவம் யானையில் சிறந்தது ஐராவதம் விருஷங்களில் சிறந்தது கற்பக விருக்ஷம் புற்களில் சிறந்தது அருகம்புல் வேதங்களில் சிறந்தது ரிக்வேதம் மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மத்திரம். மருந்துகளில் சிறந்தது அமிர்தம் உருவாகங்களில் சிறந்தது தஸ்தம். நபரத்தின்ஙகளில் சிறந்தது வைரம் அதுபோல மணி மாலைகளில் சிறந்தது ருத்திராக்ஷ மணி மாலையாகும்.

பவளம்

bksureshv@gmail.com


பவளம்

http://3.bp.blogspot.com/_ADwJgwfepSw/R3HJSdZiUcI/AAAAAAAAA2M/Q3--0XXkpPM/s400/Anmegamalar-1A.jpg

பவளத்தை தெரியாத மனிதர்களே இல்லை. அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை பவளம் அனைவரின் வீட்டிலும் இருக்கும். பவளம் Whilse Coral என சொல்லப்படும். வெள்ளைப் பவளமும் உண்டு. அதே போல சிகப்பு, இளம் சிகப்பு, வெள்ளையும் சிவப்பும் கலந்த பலவகை பவளத்தை உபயோகிக்கலாம். இன்னும் சொல்லப்போனால் இரத்னிங்களிலேயே மருத்துவ குணம் கொண்டுள்ள இரத்தினம் பேசப்பட்டாலும் பவளமும் சேர்த்தே கொடுக்கப்பட்டுள்ளது. பவளத்தில் மஞ்சள் நிற காஸ்மிக் கதிர்களை வெளிவிடும். அக்கதிர்கள் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. என்னடா! சிவப்பு பவளத்திலிருந்து மஞ்சள் நிற காஸ்மிக் கதிர்கள் என்று நீங்களே பார்க்கலாம். முப்பட்டை கண்ணாடிக்குள் ஒரு Oringinal பவளத்தை வைத்து பார்க்கும்போது மஞ்சள் நிற கதிர்கள் வெளிவருவதை நீங்கள் பார்க்கலாம்.

பவளம் செவ்வாய் கிரகத்திற்கு உரியது. இந்த பவளத்தின் கடினத்தன்மை மூன்று. ஒளிவிலகல் 1.49 - 1.66 ஒப்படத்தி 2.68. எந்த வடிவத்திலும் பவளத்தை அணிந்து பலன் பெறலாம். பவளத்தில் விநாயகர் போன்ற பல உருவங்கள் அதனுடைய கடினத்தன்மை குறைவினால் அழகாக செதுக்கலாம். மிகவும் அழகாக பலன் தரும் பவளம் ஜப்பான் பவளம. அதேபோன்று பவளத்தின் பின்புறம் அதனுடைய வேர்கள் இருக்கும். பவளம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஜாதக ரீதியாகவோ அல்லது மருத்துவ ரீதியாகவோ பவளம் அணிபவர்கள் வேறுடன் கூடிய பவளத்தையே அணிய வேண்டும். பவளத்தை அணியும்பொழுது தனக்குள் இருக்கும் கோழைத்தனம் மறையும். எதையும் தாங்கும் சக்தி பிறக்கும். தொடர்ந்து ஒரு காரியத்திற்கு போராடும்போது வெற்றி நிச்சயமில்லையா, இங்கு தொடர்ந்து என்ற வார்த்தைக்கு பவளத்தை அணியும்போது பலன் கிடைக்கும்.

விடாமுயற்சிக்கு பவளம் என்றுமே கூறலாம். அக்காலத்திலேயே அதாவது ராஜராஜச்சோழன் காலத்திலேயே அனைத்து நகை வியாபாரிகளும் பவள மோதிரத்தின் குண நலன்களை அவரால் அணியப்பெற்று அனைத்துப் பெண்களும் கண்டிப்பாக பவள அணிய வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக வரலாற்று நூல்களில் உள்ளதை நாம் காணலாம். அக்காலத்தில் இருந்து தான் அனைத்து கொல்லர்கள் பின்பு நகை கடைகள் போன்ற அனைத்து இடங்களிலுமே இன்றுவரை பவள மோதிரங்கள் விற்பதை நாம் காணலாம்.

பவளம் எந்த ராசி, நட்சத்திரம், லக்னம், திசை, புத்தி, கோச்சாரம் எதுவாயினும் பவளம் அணியலாம். மேலும் எந்த உலோகத்தில் வேண்டுமானாலும் அணியலாம். மேலும் மாங்கல்ய பலம் கொடுக்கக் கூடிய ஒரே இரத்தினம் பவளமே ஆகும். அதை தாலிப்பவளம் என்று கூறுவோம். அக்காலத்திலிருந்து இக்காலம் வரை தாலிப்பவளம் இரண்டாகத்தான் அணிய வேண்டும். ஒரு பெண் மகள் தன் திருமணத்திற்கு பிறகு பல விஷயத்தில் தன்னை மாற்றிக் கொண்டே ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

தன் தாய் வீட்டிற்கும், மாமியார் வீட்டிற்கும் வேறுபாடுகள் எந்த குடும்பத்திலும் உண்டு. (உணவு முறையிலிருந்து) அதை அனைத்தையும் ஒரு பெண்மகள் தான் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பல விஷயங்களில் உடனே சீர் பெற இப்பவளம் மிகவும் உதவியாக இருக்கின்றது.

ஒரு குழந்தை பிறந்த உடன் Oringinal பளவத்தை அந்தக் குழந்தையின் உதட்டில், தினமும் குளிப்பாட்டிய பிறகு பலமுறை தடவிக்கொண்டே வரும்பொழுது உதடுகள் நல்ல கலர் பெறுவதுடன், Shining கிடைப்பதை கண்ணால் பார்க்க முடியும். பவளம் கரையும் தன்மை உடையது. நீங்கள் அணியும் சைசுக்கு ஏற்ப உங்கள் உடல் உஷ்ணத்திற்கு ஏற்ப பவளம் கரையும்பொழுது அதை மாற்ற வேண்டும்.

செவ்வாய் ஜாதகத்தில் வலு குறைந்தோ அல்லது சீரான வலுவை கொடுக்க இயலாத தருவாயில் இருக்கும்பொழுதோ, வயிறு சம்பந்தமாக அடிக்கடி கோளாறு இருப்பவர்களோ, எதிர்ப்பு சக்தி குறைந்த ஜாதகரோ, தொடர்ந்து ஒரு வேலை செய்ய தடுமாறுபவர்களாகவோ, அடிக்கடி தோல் சம்பந்தமான உபாதைகளை அனுபவிப்பவர்களாகவோ, அஜீரணக்கோளாறு உடையவர்களாகவோ, நரம்பு சம்பந்தமான தளர்ச்சி ஏற்படுபவர்கள் இப்பவளத்தை தேவைப்படும் கேரட்டில் தன் ஜாதக ரீதியாக ஆராய்ந்து தனக்கு தேவைப்படும் உலோகத்தில் உரிய முறையில் பதிக்கப்பட்டு Cleansing செய்த பிறகு செவ்வாய் கிழமையில், செவ்வாய் ஹோரையில் ஆரம்பிக்கும்பொழுது கண்கூடா பலன் கிடைக்கும்.

டர்காய்ஸ்

bksureshv@gmail.com


டர்காய்ஸ்


http://www.bruce-moffitt-jewelry.com/images/c-ensemble-turquoise.jpg

டர்காய்ஸ் என்பது உப இரத்தின வகையைச் சார்ந்தது. பலர் இந்த இரத்தினத்தைப் பற்றி அறிந்திருப்பர்.  பழங்காலத்தி லிருந்தே இந்த இரத்தினத்தை மாலையாகவோ, ஆரமாகவோ, வளையலாகவோ, ஒட்டியாணத் தில் பதித்தோ அணியும் வழக்கம் இருந்துவந்திருக்கிறது. இது பச்சையும், நீலமும் சேர்ந்த ஒரு அழகான நிறத்தைக் கொண்டிருக் கும். இதை யார் வேண்டுமானா லும் அணியலாம். தீய பலன் களைக் கொடுப்பதற்கு இந்த இரத்தினத்திற்கே சக்தி இல்லை.

இந்த இரத்தினத்தின் உருவ அமைப்பு ஜொலிப்புத் தன்மையை இழந்திருந்தாலும் தனி அழகைப் பெற்றிருக்கும். இதை ஒருவர் அணியும் தறுவாயில் மற் றவர் கண்ணை கண்டிப்பாகத் தன்வயப்படுத்தும். இதில் ஈரா னிய டர்காய்ஸ்களுக்கு மிகுந்த வரவேற்புள்ளது. ஆனால் இந்த ஈரானிய டர்காய்ஸில் கருப்புக் கோடுகள், கருப்பு ரேகைகள், திட்டுத் திட்டான கருப்புப் படிமங்கள் அதன்மேல் படிந்திருக் கும். இவை காலங்காலமாக, ஈரான் நாட்டில் தான் கிடைக்கி றது. ஆனால் தற்போது கற்கள் குறைந்து விட்டதால் இதன் விலை, கலிபோர்னியா, அரிசோனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கிடைக்கும் டர் காய்ஸை விட அதிக விலை மதிப்புள்ளதாக இருக்கிறது.

முதன் முதலில் துருக்கியர்களே இதை அதிகம் பயன் படுத்தியதால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே Tourquise என்று பெயரிட்டு அணிந்து பயன் பெற்றதாகப் பல வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கற்கள் நிறம் மாறும் தன்மையைக் கொண்டது. சமயத்தில் தன் நிறத்தை இழந்து வெளுத் தும் விடும். இந்தக் குறைபாட்டினால், இந்த அழகான டர்காய்ஸை அழகுக் கலைப் பொருளாக வும், ஆபரணங்களுக் காகவும் மட்டுமே பலர் பயன்படுத்து கின்றனர்.

இதில் அலுமினியம், பாஸ்பாரிக் ஆசிட், கொப்பர் ஒக்ஸைட், தண்ணீர் போன்ற பல தாதுப் பொருட்கள் உள்ள டங்கியிருக்கின்றன. இதன் கடின தன்மை  5 முதல் 6 வரை ஆகும். ஒப்படர்த்தி 2.7 ஆகும். இதன் ஒளிவிலகல் 1.61 என்பதாகும்.

இந்த இரத்தினத்தை குருவுக்காகவும், சனிக்காகவும், சூரியனுக்காகவும், கனக புஷ்பராகம், நீலம், மாணிக்கம் போன்ற மூன்று இரத்தினத்திற்கு பதிலாகவும் அவ ரவர் ஜாதகத்தை ஆராய்ந்தபின் அணி யலாம். இங்கு டர்காய்ஸ் ஒரு உபரத்தினம் மட்டுமே என்பதை நீங்கள் ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும். மாணிக்கம், கனக புஷ்பராகம், நீலம் போன்ற நவரத் தினக்கற்களுக்கு சமமான சக்தி டர்காய்ஸில் கண்டிப்பாக இராது. மேலும் 1, 3, 6, 8, 10, 12, 15, 17, 19, 21, 24, 26, 28, 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களும், கூட்டு எண்ணாக 1,3,6,8 வருபவர்களும் இந்த இரத்தி னத்தை அணிந்து நன்மைகளை அடையலாம்.

இந்த இரத்தினத்தை அணிந்து மருத் துவரீதியாகப் பலன் பெற்றிருப்பவர் பலர். முக்கியமாக தொண்டை பிரச்சினைகள், இளமைக் குறைவு, வசீகர சக்தி மந்தமாதல், சூட்டினால் ஏற்படும் சிரமங்கள், ஈரல் கோளாறுகள், அதிக சோர்வு இவற்றினால் பிரச்சினைகளுக் குள்ளாகும் எந்த ஜாதகராக இருந்தாலும், எந்த ராசி, எந்த நட்சத்திரம், எந்த லக்னம், கோச்சாரம், திசா புத்தியாக இருந்தாலும் இதை அணியலாம்.

இந்த இரத்தினத்தை தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற எந்த உலோகத்திலும் பதித்து அணியலாம். மூன்று கேரட்டுக்கு மேல் இருந்தால் சிறப்பு. மோதிரத்திற்குப் பின்னால் திறப்பு வைத்தே அணிய வேண்டும். இந்த இரத்தினத்திற்கு மறுபக்கம் பாறை வடிவில் காணப்படும்.

இந்த இரத்தினத்தை உரிய முறையில் பதித்து அணிவதற்குத் தயாராக இருக்கும் நிலையில் சுத்தப்படுத்திய பின்னரே பலன் கிடைக்கும். இல்லையேல் இது அழகுக்கு மட்டும் பயன் படுத்தும் கல் போன்றே விளங்கும்.

பூமியில் கடவுளால், இயற்கையினால் உருவாக் கப்பட்ட பொருட்கள் பல. அதில் ஒன்று தான் இரத் தினங்கள்.

இரத்தினங்களின் சக்தியை அக்காலத்திலேயே நம் முன்னோர்கள் உணர்ந்து நமக்காகத் தந்துள் ளனர். அவற்றை முறைப்படி தெரிந்து, அறிந்து உபயோகிக்கும்போது பலன் நிச்சயம் என்பதை அணிந்தவர்கள் உணர்ந்திருப்பதை போல நீங்க ளும் அறிந்து பலன் பெறுவீர்களாக.

அமிதிஷ்ட்

bksureshv@gmail.com


அமிதிஷ்ட்

http://www.bananaverse.com/wp-content/uploads/2009/01/cisco_sc_con_002.jpg

அமிதிஷ்ட் என்ற இரத்தினத்தை தமிழில் `செவ்வந்திக்கல்' என்பர். இதனுடைய நிறம் Purple (செவ்வந்தி). இது சிலிகா என்னும் Chemical Groupஐ சார்ந்தது. இதன் உருவம் ஸ்படிக உருவ அமைப்பில் இருக்கும். இது metamafic ரக பாறைகளில் இருக்கும்.

ஆறு பட்டைகள் கொண்ட வடிவத்தில் இருக் கும். மங்கலான கற்களிலிருந்து தெள்ளத்தெளி வான கற்கள் வரை இருக்கும். பூமியில் நிறைய இருப்பதினால் இது அனைவரும் வாங்கக் கூடிய அளவிலேயே இருக்கும். இதனுடைய விளைச்சல், தரம் இவற்றைக் கொண்டுதான் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அதிக ஒளி ஈர்ப்பு உள்ள கற்கள் அதிக விலையிலும், மந்தமாகவும், நிறம் குறைவாக வும் உள்ள கற்கள் விலை குறைவாகவும் இருக் கும். இது குஞுட்டி Semi Precious (உப ரத்தினம்) வகை யைச் சார்ந்தது. யார் வேண்டுமானாலும் அணிய லாம்.
ஒருவரின் ராசி, லக்னம், நட்சத்திரம் எதுவாக இருந்தாலும் இந்த Amethyst டை அணியலாம். Amethyst சுத்தமாக உள்ளதா என்பதை மட்டும் பார்த்தால் போதும்.

Amethyst டை சிறு குழந்தை முதல் முதியவர் வரை எந்த அளவிலும் அணியலாம். எந்த உருவ அமைப்பிலும் Amethyst டை அணியலாம். இந்த உலோகத்தில்தான் பதிக்கப்பட வேண்டும் என்ற எந்தக் கோட்பாடும் கிடையாது.

மேலும் கனக புஷ்பராகம் அணிய வேண்டும் என்று நினைப்பவர்கள், அதை அணிய இயலாத போது, இந்த Amethyst மாற்று இரத்தினமாக அணியலாம்.

3ஆம் எண் சார்ந்தவர்கள் Amethystடை அதி கப்படியாக உபயோகிக்கலாம். Amethyst இரத்தி னங்களாக மட்டும் இல்லாமல் மாலை வடிவங் களாகவும் கிடைக்கிறது.

இந்த மாலை வடிவங்களில் கிடைக்கும் Amethyst பெரும்பாலும் 3rd qualityக்கு கீழ் உள்ள வகையில்தான் கிடைக்கும்.

அதை அணியும்போது அழகுபடுத்த மட் டுமே உதவும். மேலும் Amethyst பிரமிட் உரு விலும், Cristal Pencil வடிவிலும் கிடைக் கும். ரெய்கிற்காக இதை பலர் உபயோ கிக்கின்றனர்.

Amethystன் பலாபலன்கள்:

ஒருவர் Amethystடை அணியும்போது மனதில் சந்தோஷம் இருக்கும். கெட்ட எண் ணங்கள் விட்டு விலகும். மனத்தெளிவு பெறுவர். குழப்பங்களிலிருந்து விடுபடுவர்.

Amethystøhடை வீட்டில் வைக்கும்போது நல்ல அதிர்வுகளை வீட்டில் இருப்பவர்களால்  உணரமுடியும். உதாரணமாக, ஒருவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தில் படுத்த படுக்கை யாக இருந்தால் அந்த அறையினுள் செல்லும் போது ஒரு வகையான இறுக்கம் இருக்கலாம். அந்த இடங்களில் இந்த Amethyst பிரமிட்டை யோ, Amethyst பென்சிலையோ நன்றாகச் சுத்தி கரித்தபின் அங்கு வைத்தால் அந்தச் சூழ்நிலை மாறுவதை உணர முடியும்.

குரு கிரகத்தின் ஒளிக்கதிர்கள் யாரெல்லாம் ஜாதக ரீதியாகப் பெற வேண்டும் என்றுள்ளதோ அவர்களெல்லாம் சரியான அளவில் Amethyst அணியும் போது பலன் நிச்சயம் கிடைக்கும். Amethyst வேறு கற்களுடன் சேர்ந்து அணியும் போது அதை அழகுக்கு மட்டுமே பயன்படுத்தப் பட வேண்டும்.

அதாவது, Amethyst, வைரம், மாணிக்கம் போன்றவற்றைச் சேர்த்துச் செய்த ஆபர ணங்களை விருந்துபசாரங் களின் போது அழகு சேர்க் கப் பயன்படுத்தலாமே அன்றி, ராசிக்காக இவ்வாறு கலந்து அணியக் கூடாது.

அழகுக்காக அணியும் Amethyst பதித்த ஆப ரணங்களை யார் வேண்டுமானாலும் மாற்றி அணியலாம். ஆனால் Amethyst மட்டும் பதித்த மோதிரத்தையோ, டொலரையோ, தினமும் ஒரு வர் அணியும் தறுவாயில் அதை மற்றவர் மாற்றி அணியக் கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு அதி ர்வு இருக்கும். அதற்குத் தக்கவாறு Amethyst சீர் பெற்று தன் வேலையை செய்யும். அதை மற்றவர் அணியும்போது அந்த அதிர்வுகள் மாறுபடுவ தினால் பலன் கிடைக்காது. Amethyst அணியும் முன் அதற்கான முறையில் சுத்தப்படுத்திய பின் னரே அணிய வேண்டும். சுத்தப்படுத்திய பின் அதன் அதிர்வுகள் சீர்பெறும்.  அவ்வாறு முழு மையாக சுத்தப்படுத்திய பின் தான் முழுபலன் கிடைக்கும்.

ஸ்படிகம்

bksureshv@gmail.com


இரத்தின களஞ்சியம்
ஸ்படிகம்


http://www.minerough.com/Images/Products/Quartz-cut/Quartz-mix.jpg

இந்த மாதம் ஸ்படிகங்கள் பற்றிப் பார்க்கலாம். மிக அற்புதமான கல் ஸ்படிகம். இதை Quartz என்பர். இதன் நிறங்கள் பல என்றாலும் அதிகமாகக் கிடைக்கும் நிறங்கள் வெள்ளை, மென்சிவப்பு, ரோஜா போன்றவை. ஸ்படிகத்தைத் தொடும்போது ஜில்லென்று உணரலாம். விலை மிகவும் குறைவுதான். சிறிய உருவத்தில் இருக்கும் ஸ்படிகங்களை பாறைகளாகப் பார்க்கும் போது கற்கண்டுகளை நெருக்கமாக ஒட்டியது போல் காணப்படும்.

ஸ்படிகப் பாறைகளை அனைவரினதும் கண் பார்வை படுமாறு வைக்கும் போது அந்த இடத்தின் தன்மை மிகவும் சாந்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். ஸ்படிகத்தை எந்த வடிவில் வைத்திருந்தாலும் வாரம் இரு முறை யாவது தண்ணீருக்குள் அந்த ஸ்படிகத்தைக் குறைந்தது 4 மணி நேரம் ஊறவிடவேண்டும், பின்பு அதை அதன் இடத்திலேயே வைக்கலாம். அதை அபிஷேக முறையிலும் செய்யலாம். ஸ்படிகப் பாறைகள் வாங் கும்போது விஸ்திரண வடிவில் இருக்க வேண்டும். குறுகிய துறுப்பு உள்ளதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் மேஜையில் வைத்தால் கவனம் ஒருமுகப்படும்.

ஸ்படிகப் பென்சிலை யார் வேண்டுமானாலும் டொலராக உபயோகிக்கலாம். பிரமிட் வடிவ ஸ்படிகம் இரட்டிப்பு சக்தி பெற்றிருக்கும். ஸ்படிகப் பந்து அல்லது முட்டை வடிவில் உள்ள ஸ்படிகத்தை வீடு மற் றும் தொழில் செய்யும் இடங்களில், வெயில் படும் வாயிலில் மாட்டினால் சண்டை, சச்சரவு உள்ள வீடு கூட அமைதிபெறும். ஸ்படிகத்தை மாட்டும்போது அசையக்கூடியவாறு (உதாரணம்: நூலில்) மாட்ட வேண்டும்.

ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதே சங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமா னாலும் அணியலாம்.

ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்ப டிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூ டாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான். காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாக இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் உணரலாம்.

இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்த தரு ணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்க ளுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல் லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம். வீட் டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம். இவ்வளவு அற்புத மான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்யும் போது அதன் சக்தி அப்படியே இருக்கும்.

ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மெகரு. இந்த மெகரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படி கத்தை யானை வடிவில் வைக்கும்போது லஷ்மி கடாட்சம் வரும். இவ்வளவு அற்புதங்கள் அடங் கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்களாக.

Reiki Miracle Healing Method

bksureshv@gmail.com



உலகில் எதை எதையோ அதிசயங்கள் என்று சொல்லி உள்ளார்கள். விஞ்ஞானிகளும் அணுசக்தி, மின்சக்திகளைப் பற்றிக் கண்டுபிடித்தார்கள். ஆனாலும் இவற்றையெல்லாம் விட மனிதனுக்குள்ளே மறைந்திருக்கும் ஆற்றல் மிக்க மகா சக்தி தான் எவ்வளவு அற்புதமானது. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ஆனாலும் அந்தச் சாதனைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது மனிதனுக்குள்ளே மறைந்திருக்கும் ஆற்றல் மிக்க மகாசக்தி தான் எவ்வளவு அற்புதமானது. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ஆனாலும் அந்த சாதனைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது மனிதனுக்குள்ளே மறைந்திருக்கும் மாபெரும் சக்தி தான். இதையே சுவாமி விவேகானந்தரும் உன்னிடம் எல்லா ஆற்றல்களும் குடி கொண்டிருக்கின்றன என்றார். இந்த ஆற்றலைத் தெரிந்து கொண்டவர்கள் மட்டுமே காந்த சக்தி படைத்தவர்களாக இருந்து வெற்றியை அடைகிறார்கள். இதைப் பற்றித் தெரியாதவர்கள் வாழ்க்கையில் தோல்வியைத் தான் அடைய முடியும். மனதின் எல்லையற்ற ஆற்றல்களைத் தெரிந்து அதைச் செயலாற்ற எவ்வளவோ பயிற்சி முறைகள் உள்ளன. அதிலே ரெய்கி பயிற்சி மிகவும் அற்புதமானது என்றே சொல்லலாம். நமது இருபெரும் காவியங்களில் கதையோடு நிறையக் கிளைக் கதைகள் புகுத்தி அதன் மூலமாக வாழ்க்கைக்குத் தேவையான தத்துவ விளக்கத்தை அதாவது உட்கருத்தை வைத்துப் படைத்தார்கள். அது போல நானும் ரெய்கியோடு பல கருத்துகளையும் நல்விஷயங்களையும் வைக்கிறேன். வாழ்க்கையை நெறிப்படுத்திச் செம்மையாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
நம் பெரியோர்கள் மனிதனை எப்படியெல்லாம் உவமைப்படுத்தி உள்ளார்கள் என்று பார்க்கலாம். திருமூலர் `உடம்போ ஆலயம், உள்ளமே பெருங்கோயில் வாய் கோபுர வாசல்' என்றார். ஔவைப் பிராட்டியாரும் `அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்' என்று எவ்வளவு உயர்வுபடுத்தி உள்ளார்.
"அஹம் பிரமாஸ்மி :" உள்ளே பிரம்மாய் இருக்கிறேன்.
"எனக்குள் கடவுள் இருக்கிறார்."
"த்த்வமஸி" (நீயும் நானும் ஒன்றே)
"த்வம் ஏவ ஸர்வம்" (எல்லாம் ஒன்றே)
"நா சச்சிதானந்த ஸ்வரூபம்" (எனக்குள் எல்லாம் அடக்கம்)
"நான் ஒரு ஆத்மா" - என்று வடமொழி நூல்கள், மனிதனை உயர்வாகக் கூறிப்போற்றியுள்ளன.
ஆத்மாவானது பல பிறவிகளில் இருந்து மாறி, மனித ஆத்மாவாக பூமியில் வருவதே உயர்ந்த பிறவியாகும். பிற உயிரினங்களிலிருந்து மனிதன் மாறுபட்ட அமைப்பு உடையவன். ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட மனிதன் வரை, அனைவரிடத்திலும் இறைவன்குடி கொண்டிருக்கின்றான். அதனால் தான் பெரியோர்களும் மனிதனும் கடவுளாகலாம் என்றுச் சொல்லி உள்ளார்கள். இப்படி ஒவ்வொருவருக்குள்ளும், கடவுள் குடி கொண்டிருப்பதால் "ஒவ்வொருவரும் கடவுள் தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும்", என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியிருக்கும்போது தான் பிரச்சனைகள் இல்லாமல் இருக்க முடியும். அதாவது தூய்மையான எண்ணங்களையே எண்ணுவது, நல்ல செயல்களையே செய்வது, போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இதையே இன்னும் சிறிது ஆழமாகப் பார்த்தால் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய நெறி முறைகளாவன, இயமம், நியமம், பிராணாயாமம், ஆசனம்
(யோகா) பிரத்யாஹாரம், தாரண, தியானம், சாந்தி போன்றவைகளாகும் இவற்றை விரிவாகப் பார்க்கலாம்.
இயமம்: தீயவைகளை விட்டொழித்தல், மனதைக் கட்டுக்குள் வைத்தல் இவற்றையே செய்ய வேண்டும். கொலை, களவு, திருட்டு, கடுஞ்சொல் கூறுதல், புறங்கூறுதல், பிற உயிர்களைத் துன்புறுத்தல் இவையெல்லாம் செய்யாமலிருத்தல் வேண்டும். அதாவது எப்பொழுதும் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் நேர்மறையாகச் செயல்பட வேண்டும்.
நியமம்: நல்லவைகளையே தேடித் தேடிச் செய்தல், (கிரியை என்றும் சொல்லலாம்), உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல், உண்மையே பேசுதல், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல், புலன்களை அடக்குதல், திருப்தி அடைதல் அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்தல், ஆன்மிகச் சம்பந்தப்பட்ட நூல்களை படித்தல்.
ஆசனம்: உடம்பைப் பல நிலைகளில் வளைத்துப் பயிற்சி செய்தல், இவ்வுலகிலே யோகா செய்பவர்களை வானுலகில் தேவர்கள் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க வரவேற்று காத்து நிற்பர் என்று மிகைப்படுத்தி உள்ளார்கள்.
பிரணாயாமம்: உயிர்மூச்சை ஒழுங்காக நடத்துதல், மூச்சு சம்பந்தமான பயிற்சி.
பிரத்யாஹாரம்: வேண்டாத காரியங்களைத் தவிர்த்து, வேண்டிய காரியங்களைத் தெரிந்து கொள்வது, மனதைப் பிறபொருளிடம் சொல்லாது நிறுத்துதல்.
தாரணை: மனைதை கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்துதல்.
தியானம்: மனதை ஒரே நிலையில் நிற்கச் செய்தல்.
சாந்தி: அமைதியான உறக்க நிலை என்று சொல்லலாம்.
இந்த எட்டு நிலைகளையும் நாம் கடைப் பிடித்தோமானால் வாழ்க்கை சுபிட்சமாகவும் சீராகவும் போகும் மேலும் இதன் உட்கருத்து என்னவென்றால் ஒவ்வொரு மனிதனும் தீயவைகளை விட்டொழித்து நல்லவைகளையே செய்து மனதை ஒருமுகப்படுத்தித் தியானத்திலே உட்காரும் போது தான், சூழ்நிலையில் என்ன நினைக்கிறானோ  அது அவர்களுக்குக் கைகூடும் என்பது சூட்சுமமான உண்மையாகும். இப்படி ஒவ்வொருவரும் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்ட ரெய்கியின் உள்ளே செல்லும் போது மிகவும் அற்புதமாக வேலை செய்யும் என்று சொல்லாம். நாம் இப்போது 1. ரெய்கி என்றால் என்ன? 2. அதன் முழு அர்த்தம் என்ன? 3. அதன் வரலாறு என்ன? 4. ரெய்கி எங்கிருந்து போய் எப்படி வந்தது? 5. ஒவ்வொருவருக்கும் அந்த சக்தி எப்படிக் கிடைக்கிறது. 6. அந்தச் சக்தியை எப்படி இயங்க வைப்பது. 7. தனக்கு தானே எப்படிச் சிகிச்சை செய்து கொள்வது. 8. அடுத்தவர்களுக்கும் எப்படிச் சிகிச்சை அளிப்பது. 9. கணவன் மனைவி அன்பை அதிகரிக்கச் செய்வது. 10. தொலை தூரச் சிகிச்சையின் சிறப்பம்சங்கள். 11. பாதுகாப்பு கவசம். 12. இடம், அலுவலகம், தூய்மைப்படுத்திச் சக்தியூட்டுவது இதுபோன்ற பல சிறப்பம்சங்களும், அதோடு கூட எனக்குள் ரெய்கி அனுபவங்களும், மற்றவர்களுக்கு, ரெய்கி கொடுத்ததால் ஏற்பட்ட அனுபவங்களும், ரெய்கி படித்தவர்களுடைய அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் - பிண்டத்தில் உள்ளது அண்டத்தில். வெளியே இருப்பது உள்ளேயும் இருக்கிறது, உள்ளே இருப்பதே வெளியேயும் இருக்கிறது.
பிரபஞ்சத்தில் கண்ணுக்குத் தெரியாத எண்ணிடலங்காச் சக்திகள் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவைகள் நம் கண்ணுக்குப் புலப்படாது. நம்மால் பார்க்க முடியாது என்பதற்காக அவைகள் இல்லையென்று ஆகிவிடாது. அதேபோல பிரபஞ்சத்தில் என்னென்ன சக்திகள் இருக்கிறதோ அவைகளெல்லாம் மனிதனுக்குள்ளேயும் இருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் பஞ்சபூத சக்திகள், நவகிரகங்களின் தொடர்பு, சூரிய நாடி, சந்திர நாடி இன்னும் பல சக்திகள் உள்ளன. எப்போதும் ஒரு சக்தி தனித்து இயங்காது. ஒரு சக்தியோடு மற்றொரு சக்தியை இணைக்கும் போது அந்த சக்தி இயங்க ஆரம்பிக்கும் அதாவது பிரபஞ்ச சக்தியை  மனித சக்தியோடு இணைக்கும் போது ரெய்கி சக்தி கிடைக்கும். குரு மூலமாகத்தான் தீட்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ரெய்கி - இயற்கை பிரபஞ்ச காந்த சக்தி என்பதாகும்
ரெய்கி  இயற்கை பிரபஞ்சம்
கி   இறைசக்தி (காந்த சக்தி)
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே 18 சித்தர்கள் மகான்கள், அவதார புருஷர்கள் இவர்களெல்லாம் நிறைய அதிசயங்களும் அற்புதங்களும் செய்து மறைந்தார்கள். விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் எல்லாவற்றையும் அவர்கள் அன்றே ஞானதிருஷ்டியில் தெரிந்து பார்த்து சிலவற்றை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்தார்கள். ஆனால் அவைகள் சரியான முறையில் பயன்படுத்தாதலாலும், பல உள்ளர்த்தங்கள் கூடியதாக இருந்ததாலும், மேலும் அவைகளில் சில மண்ணோடு மண்ணாகிப் போனதாலும் தான், இந்தியா பின் தங்கி இருப்பதாகவும் சொல்லுகிறார்கள். சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் இந்தியா மிகப்பெரிய வல்லரசு நாடாக இருந்திருக்கும் எனவும் சொல்லி உள்ளார்கள். இந்தியாவிலிருந்து (அணஞிடிஞுணணா டஞுச்டூடிணஞ்) தான் இந்த முறைகளெல்லாம் ஜப்பானுக்கு போய் அங்கிருந்து
ரெய்கி என்ற பெயரோடு வந்து உள்ளது.
ஒரு சில சித்தர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்.
1. இராமலிங்க வள்ளலார் நீரிலே விளக்கேற்றியவர். அவர் ஏற்றிய ஜோதியும் அணையாத அடுப்பும் இன்றளவும் பிரசித்தி பெற்றது. அவர் ஜோதிமயமாகவே மறைந்தவர்.
2. திருமூலர் 3000 வருடங்கள் வாழ்ந்ததாகவும், 3000 பாடல்கள் எழுதியதாகவும் வரலாறு.
3. சீரடி சாய்பாபாவும் நிறைய அற்புதங்கள் செய்தவர்.
4. போகர் என்ற சித்தர் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து, மூலிகைகளால் பழநி முருகனை அமைத்தவர்.
5. மூலிகைகளைக் கண்டுபிடித்து, அதை மருத்துவ ரீதியாகக் கொடுத்ததும் சித்தர்கள் தான். இவர்கள் எல்லாம் உலக மக்களுக்கு நன்மை செய்தார்கள்.
நாமெல்லாம் இந்த அளவுக்கு இல்லாவிட்டால் கூட நமக்கு நாமே நல்லவர்களாகவும் குறைந்த பட்சம் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்காவது நல்லது செய்து ஆரோக்கியமாக இருக்கலாமே. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனிதர்களிலே மூன்று நிலைகளில் இருப்பவர்கள் உள்ளார்கள். விலங்குநிலை - மனிதநிலை - தெய்வநிலை.
விலங்குநிலை: தன்னையும் கெடுத்து பிறரையும் கெடுப்பது.
மனித நிலை: தன்னைப்பற்றி மட்டும் நினைத்து, பிறரைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பது.
தெய்வநிலை: தானும் நன்றாக வாழ்ந்து, பிறரும் நன்றாக வாழ்வதற்குண்டான உதவிகள் செய்து, உலக மக்களுக்கும் நன்மை செய்து வாழ்பவர்கள் தெய்வநிலைக்கு ஒப்பானவர்கள்.
தெய்வ நிலையில் இல்லாவிட்டாலும் கூட, விலங்கு நிலைக்கு போகாமலும் குறைந்த பட்சம்  மனித நிலையில் இருந்தால் கூட வீடும் நாடும் ஓரளவுக்குச் சுபிட்சமாக இருக்கும்.
மக்கள் நிறைய நல்ல விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் சோம்பலும், அறியாமையும் ஆகும்.
சோம்பல் அறியாமை புகுந்த கூட்டில்.
யாரும் அறியாமல் ஊறுமே நோய்
நல்ல விஷயங்களை நிறைய பேர் ஏற்றுக்கொள்ள முன்வராததே பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கிறது.
ரெய்கி வரலாறு பற்றிக் காண்போம்: `ஈணூ. மிகாவ் உசுயி' என்பவர் ரெய்கி குரு ஆவார். இவர் திபெத்திய ஞானி, இவர் காலையில் பைபிள் வாசிப்பார். பகல் நேரத்தில் கல்லூரியில் வேலை செய்வார். மாலையில் மக்களுக்கு மருந்து மாத்திரை கொடுப்பார். இந்நேரத்தில் அவரிடம் படிக்கும் மாணவர்கள் ஒரு நாள் கேள்வி விடுக்கிறார்கள்.
காலை பைபிள் படித்துவிட்டு மாலை ஏன் மருந்து கொடுக்கிறீர்கள். பைபிளில் ஏசுகிறிஸ்து தொடுதல் சிகிச்சை முறை மூலமாக பலநோய்களைக் குணமாக்கியுள்ளாரே அவரைப் போல நீங்கள் ஏன் செய்யக் கூடாது என்று கேட்டார்கள். அவர் உடனே தன் வேலையை ராஜினாமா செய்து விட்டுத் தொடுதல் சிகிச்சை முறைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். ஜப்பானிலும் அமெரிக்காவிலும் 21 வருடங்கள் ஆராய்ச்சி நடந்தது. ஆனாலும் விடை கிடைக்கவில்லை. ஒரு புத்தபிட்சு இந்தியாவிற்குப் போய்ப் பாருங்கள். உங்கள் ஆராய்ச்சிக்கு விடை கிடைக்கும் என்று கூறினார். அவர் இந்திய வந்து சமஸ்கிருத மொழி பயின்று நிறைய ஓலைச்சுவடிகளைப் படித்தார். அதில் புத்தருடைய சுவடுகளில் அவருக்கு விடை கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு அவர்கள் ஜப்பான் சென்றார்கள்.
பிறகு அவர் அங்கு `சூரியோமா' என்னும் மலையில் "ஓதூணிணாச்" என்னுமிடத்தில் 2 நாள் தியானத்தில் அமர்ந்தார். 21 நாள் முடியும் கடைசி நேரத்தில் ஆகாயத்திலிருந்து இடி மின்னலுடன் கூடிய சக்தி மிகுந்த பேரொளி அவரை நோக்கி வந்தது. அந்த சக்தியானது அவரது  மூன்றாம் கண் (புருவ மத்தி) என்னுமிடத்திற்குச் சென்றது. அப்பொழுது அவரது உடல் சுருங்கி உள்ளம் விரிவடைவதை அவர் உணர்ந்தார். அவருக்கு அப்பொழுது புத்துணர்ச்சியும் கிடைத்தது. பிறகு கண்ணைத் திறந்து பார்க்கையில் வானத்தில் வானவில் நிறங்களைப் பார்த்தார். அதன் உள்ளே ரெய்கி மந்திரங்களைக் காட்சியாகப் பார்த்தார். அப்பொழுது அவருக்கு அசரீ ஒலியும் கிடைத்தது.
பிறகு என்ன நடந்திருக்குமென அடுத்த இதழில் பார்க்கலாம்.

அடுத்ததவருக்கு சக்தி அளித்தல் Heal to others


bksureshv@gmail.com


உசுயி அவர்கள் 21 வருட ஆராய்ச்சியின் பயனால்  அவர் கியோடர் என்னுமிடத்தில், சூரியோமா என்னும் மலையில்,  21 நாள் தியானம் செய்ததன் பலனாக ஆகாசத்திலிருந்தே அவருக்கு சக்தி கிடைத்தது.  அப்போது அவருடைய உடல் சுருங்கி, உள்ளம் விரிவடைவதை நன்கு உணர்ந்தார். கண்ணை திறந்து பார்த்ததும், ஆகாயத்தில் வானவில் கலரினுள் சங்கேத குறியீடுகளைப் பார்த்தார். அப்பொழுதே அசரீரி ஒலியும் அவருக்கு கிடைத்தது.  தியானத்தின் முழுப்பலனும் கிடைத்த திருப்தியில் (Physical Health, Mental Health, Emeretial Health)  அவர் மலையை விட்டு கீழே இறங்கினார்.  அப்போது ஒரு பெரிய கல் ஒன்று, அவருடைய கால் பெருவிரலை காயப்படுத்தியது.  அதோடு இரத்தமும் கொட்டிற்று. அவர் உடனே தன்னுடைய கையை, காயப்பட்ட விரலின் அருகே கொண்டு போனார்.  அந்த சமயம் தான் அவருக்குள் அற்புதம் நடந்தது.  அதாவது அவருடைய கைகளிலிருந்து சக்தி வெளிப்பட்டது.  அதனால் காயத்தின் வலியும் நின்றது.  இரத்தமும் நின்றது.  இது அவருக்கே கிடைத்த முதல் அனுபவமாக இருந்தது.  இந்த முறையைத் தான் தனக்கு தானே சுய சிகிச்சை அளித்தல் (Self Healing) என்று சொல்லாம்.

அடுத்ததவருக்கு சக்தி அளித்தல் Heal to others
மிகாவ் உசுயி அவர்கள். மலையை விட்டு முழுவதுமாக கீழே இறங்கியவுடன். 21 நாளாக விரதம் (fasting) இருந்ததால், ஒரு ஹோட்டலுக்குள் உணவு சாப்பிடச் சென்றார்.  அங்கே ஒரு சிறிய பெண் பல் வலியால் தாங்க முடியாத வேதனையில், அழுது துடித்துக் கொண்டிருந்தததைக் கண்டார்.  உடனே அந்தப் பெண்ணின் அருகே சென்று, தன் கைகளைக் கொண்டு சக்தியூட்டி வலியை குணப்படுத்தினார்.  அழுது கொண்டிருந்த அந்தப்பெண், வலி முழுவதும் நீங்கி, சிரித்துக்கொண்டு துள்ளி குதித்து வெளியே விளையாட சென்று விட்டது.  அவர் தன் உணவை முடித்துக்கொண்டு, ஹோட்டலை விட்டு வெளியே வந்தார்.  ரோட்டில் வயது முதிர்ந்த ஒரு பெரியவர் நடக்க முடியாமல் செல்வதைப் பார்த்தார்.  அவரருகே சென்று அவரை குணப்படுத்தினார். இன்னும் பலரை குணப்படுத்துவதற்கு சக்தியும் அவர் கைகூடி வரப்பெற்றதால், ஜப்பானில் ஆஞுஞ்ஞ்ஞுணூ ஞிடிணாதூ என்னுமிடத்தில் நிலையாக உட்கார்ந்து, பல வழிகளிலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை, ரெய்கி சக்தியினால் குணப்படுத்தி, நல்வழி காட்டினார்.  தன் வாழ்வின் கடைசி வரைக்கும் அவர் இதே போலவே செய்து, இறக்கும் தருவாய் சமயத்தில் டாக்டர்.  சுஜிரோ ஹயாஷி என்பவருக்கு இந்த இரகசிய பரிமாற்றம் செய்துவிட்டு அவர் மறைந்தார்.